பொது மக்கள் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்க மற்றும் அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் ‘ஆளுநருக்கு சொல்லுங்கள்’ என்ற புதிய திட்டம் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக மேல் மாகாண சபை மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களின் சேவை, விதிமீறல்கள் மற்றும் பொது மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள விரைவாக நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 2025 ஜனவரிக்கு பிறகு வட்ஸ்அப் மற்றும் இணையம் மூலமாகவும் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், இந்த திட்டத்திற்கு பொறுப்பாக மக்கள் தொடர்பு அதிகாரியாக அருண பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் தங்கள் முறைப்பாடுகளை அறிவிக்க,
தொலைபேசி – 011-2092720 / 011-2092721
தொலைநகல் – 011-2092705
மின்னஞ்சல் – operationroomwpe@gmail.com