உரிய காலத்துக்கு முன் உயர்தர பரீட்சை: அமைச்சர் ஹரிணிக்கு எதிராக மாணவி வழக்கு?

Date:

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக் கோரி மாணவியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, டிசம்பர் 12ஆம் திகதி ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (25) தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் முர்து பெர்னாண்டோ மற்றும் பிரியந்த பெர்னாண்டு ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வின் முன்னால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவி ஹன்சனி அழககோன் தாக்கல் செய்த மனுவில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சர் திருமதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுதாரர் தனது மனுவில், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் படிப்பு தொடர்பான 39/2023 சுற்றறிக்கையை மேற்கோள்காட்டி, 107 கல்வி நாட்கள் நிறைவடைந்த பின்னரே உயர்தரப் பரீட்சை நடத்த வேண்டும் என்ற விதிமுறையை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தக் கல்விக் காலத்தை பூர்த்தி செய்யும்முன் பரீட்சை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...