கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான இணையவழி முறைமை

Date:

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யக்கூடிய இணையவழி முறைமையொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அருகே மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது. நேற்றைய தினம் விடுமுறை நாளாக இருந்த போதிலும் மக்களின் வரிசை காணப்பட்டுள்ளது..

இன்றைய தினம் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குச் சென்றிருந்த மக்கள் கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.

அடிப்படை சுகாதார பாதுகாப்பு வசதிகள் இன்றி வரிசையில் காத்திருப்பதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான, பின்னணியில் கடவுச் சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு நாளாந்தம் 750 முதல் 1400 வரையான டோக்கன்கள் மாத்திரமே விநியோகிக்கப்படுகின்றன.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...