”கலாதினீ” விருது பெற்றார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சனூன்..!

Date:

ஊடகத்துறையில் 43 வருடங்களாக சேவையாற்றி வரும் புத்தளத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.யூ எம்.சனூஸ் ‘கலாதினீ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

புத்தளம் மாவட்ட செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாவட்ட சாகித்திய கலை விழா இம்முறை ஆனமடுவயின் மறைந்த கலைஞர் எழுத்தாளர் ஏ . சுந்தஹாமி ஞாபகார்த்தமாக தம்பண்ணி அக்வெஸ்ஸ என்ற மகுட வாசகத்தின் அடிப்படையில் ஆனமடுவ சுதம்பாய மண்டபத்தில் கடந்த இன்று வெள்ளிக்கிழமை (29) புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம் எஸ் பீ ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.

இச் சாகித்திய விழாவில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழியில் நீண்ட நாட்களாக சேவையாற்றி வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம் யூ எம் சனூன், ஜே. ஏ.ஆர்.சீ பெர்னார்ந்துபுள்ளே, பத்மா குமாரி, ரெக்ஸ் ஹெரிஸன் பெர்னாந்து ஆகியோருடன் கலைத்துறையில் சாதனையாளர்கள் ஆகியோர் ‘கலாதினீ’விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...