புத்தளம் மரிக்காருக்கு கனடாவில் விருது..!

Date:

கனடாவில் இயங்கும் ‘சம்யுக்தா’ நிறுவனத்தின் சர்வதேச விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை  இலங்கையைச் சேர்ந்த புத்தளம் மரிக்கார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இவ்விருது விழா கனடா டொரோன்டோவில்  கடந்த 24ஆம் திகதி நகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சர்வதேச ரீதியில் ‘தெரிவு,பொதுமக்கள் வாக்களிப்பு, மீள் தெரிவு’ ஆகிய மூன்று நிபந்தனைகளின் கீழ் பல சுற்றுக்களில் இடம்பெற்ற இப்போட்டியில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது ‘புத்தளம் மரிக்காருக்கு வழங்கப்பட்டது.

இதன்போது விருதுக்காக, உலகம் முழுதும் இருந்து வாக்களித்த நண்பர்கள், உறவுகள்  குறிப்பாக புத்தளம் உறவுகள், Puttalam Online குழுமம், SL Politics குழுமம், UK, Qatar நண்பர்கள் வட்டம், அலுவலக நண்பர்கள், உட்பட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

விருது பெறும் புத்தளம் மரிக்காருக்கு ‘NewsNow’ இன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

 

Popular

More like this
Related

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...

காஸா உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்:வெள்ளை மாளிகை தகவல்!

டிரம்ப் - நெதன்யாகு மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது. காஸாவில் அமைதியை நிலைநாட்ட...