துருக்கி நாட்டின் 101வது ஆண்டு குடியரசு தின நிகழ்வுகள்

Date:

துருக்கி நாட்டின் 101வது ஆண்டு  குடியரசு தினம் , இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) தலைமையில் கடந்த 29ஆம் திகதி  காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் கலந்துகொண்டார்.

இலங்கைக்கான துருக்கி தூதுவரின் அழைப்பின் பேரில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியார் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது ​​துருக்கி தூதுவர் நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படும் தனித்துவமான நட்புகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பிணைப்பை விளக்கினார்.

மேலும், சுமுகமான கலந்துரையாடல்களுக்கு மத்தியில் ஜெனரல் சவேந்திர சில்வா, துருக்கிய மக்களுக்கான இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பற்றி தூதுவர் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதேவேளை துருக்கிய குடியரசு தினத்தின் நினைவாக ஒக்டோபர் 24ஆம் திகதி காலி முகத்திடல் ஹோட்டலில் ‘துருக்கி சுவைகள்’ என்ற கருப்பொருளில் துருக்கிய உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...