துருக்கி நாட்டின் 101வது ஆண்டு குடியரசு தின நிகழ்வுகள்

Date:

துருக்கி நாட்டின் 101வது ஆண்டு  குடியரசு தினம் , இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) தலைமையில் கடந்த 29ஆம் திகதி  காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் கலந்துகொண்டார்.

இலங்கைக்கான துருக்கி தூதுவரின் அழைப்பின் பேரில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியார் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது ​​துருக்கி தூதுவர் நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படும் தனித்துவமான நட்புகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பிணைப்பை விளக்கினார்.

மேலும், சுமுகமான கலந்துரையாடல்களுக்கு மத்தியில் ஜெனரல் சவேந்திர சில்வா, துருக்கிய மக்களுக்கான இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பற்றி தூதுவர் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதேவேளை துருக்கிய குடியரசு தினத்தின் நினைவாக ஒக்டோபர் 24ஆம் திகதி காலி முகத்திடல் ஹோட்டலில் ‘துருக்கி சுவைகள்’ என்ற கருப்பொருளில் துருக்கிய உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...