தேங்காய் தட்டுபாட்டிற்கு தீர்வு : வெளியான அறிவிப்பு

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக குறுகிய காலத்தில் தேங்காய்களை உற்பத்தி செய்யும் புதிய கலப்பின தேங்காய் வகை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த புதிய செயற்திட்டத்தின் மூலம் மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் அதிக பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில்(sri lanka) தேங்காய் விலை நாளாந்தம் உச்சம் தொட்டு வருவதுடன் சந்தையில் தேங்காயின் விலை நுகர்வோர் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

சிறிய தேங்காய் ரூபாய் 140 இல் இருந்து ரூபாய் 180 தொடக்கம் 200 ஆக உயர்ந்துள்ள நிலையில் இது மக்களை மிகவும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

இந்தநிலையில், தேங்காய் விலை உயர்வை தொடர்ந்து அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையில் தேங்காயை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தது.

இருப்பினும், பொதுமக்களுக்கு தேவையான அளவு தேங்காய்கள் வழங்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...