தொழில்நுட்ப பயன்பாடு: நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக ஆரோக்கியம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வித்தியா குமாரிபேல் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த 2023 ஆண்டில் 694 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதமானோர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எயிட்ஸ் நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கையில், எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் கையடக்கத் தொலைபேசி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் உருவாகும் புதிய உறவு முறைகள் அதிகம் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...