நாடாளுமன்ற தேர்தல் 2024: தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

Date:

பொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலுக்கு மறுதினம் பௌர்ணமி தினமாக உள்ள போதிலும், பெரும்பாலான விகாரைகளின் விகாராதிபதிகள் விகாரைகளை வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை .

இந்த ஆண்டு பொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்பட உள்ளன. விகாரையில் விசேட வழிபாடுகள் நடைபெறுவதால் சில இடையூறுகள் ஏற்படக்கூடும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ள போதிலும், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக விகாரைகளில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு சமூகமாக இடம்பெற்றுவருகின்றது. தபால் மூல வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்த போதிலும் ஏதேனும் காரணிகள் நிமித்தம் வாக்களிக்க தவறியவர்கள்  எதிர்வரும் 7 மற்றும் 8 ஆகிய தினதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

7ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிடின், அருகிலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும்” இவ்வாறு ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...