பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

Date:

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக இரண்டு தினங்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் புதன் (13) மற்றும் வியாழன் (14) ஆகிய இரண்டு தினங்களுக்கும் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (18) மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் அந்தந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர்களிடம் நாளை (12) கையளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல் பணிகளுக்கு அவசியமான, மேசை, கதிரை, மண்டபம் போன்றவற்றை வழங்கச் சகல வலய கல்வி பணிப்பாளர்களும், அதிபர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...