புதன்கிழமை முதல் கடவுச்சீட்டு பெற Online பதிவு அவசியம்!

Date:

கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள Online இல் திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்யும் முறைமையை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளமுடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் பி.எம்.டி. நிலூஷா பாலசூரிய தெரிவித்தார்.

இந்த இணையவழி முறைமை நாளை மறுதினம் (06) முதல் அமுலுக்கு வரும் எனவும், ஏற்கனவே வரிசைகளில் நின்றவர்களுக்கு இந்த மாதத்திற்கான திகதி, நேர ஒதுக்கீடுகள் வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, டிசம்பர் மாதத்திற்கான திகதி,நேர ஒதுக்கீடுகளை இதன் மூலம் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, அவசரமாக கடவுச்சீட்டை பெற வேண்டிய தேவையுடையவர்கள் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

 

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...