உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Date:

எதிர்வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு  அனைத்து பரீட்சை நிலையங்களிலும் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்து அறிவுறுத்தலானது தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (National Dengue Control Unit) விடுக்கப்பட்டுள்ளது

பரீட்சை நிலையங்களுக்கு நுளம்பு விரட்டிகளை கொண்டு வருமாறு பரீட்சார்த்திகளுக்கு சமூக ஆலோசகர் லஹிரு கொடித்துவக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பேரிடர்களின் காரணமாக பரீட்சைக்கு இடையூறுகள் ஏற்படாதவாறு பேரிடர் மேலாண்மை மையம் உரிய அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதி நிறைவடையும் இதற்காக 2,312 பரீட்சை நிலையங்கள் தயார்ப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

உயர்தரப்பரீட்சைக்கு 333,185 பரீட்சார்த்திகள் தேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...