நாட்டில் நிலவும் மோசமான வானிலை: முன்பள்ளி விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

Date:

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வடமத்திய மாகாணத்தில்  பதிவு செய்யப்பட்ட 1,480 முன்பள்ளிகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று (27) முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண ஆரம்பக் குழந்தைப் பருவ அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிலந்த ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவின்  பணிப்புரைக்கு அமைய வடமத்திய மாகாணத்தில் உள்ள 94 முஸ்லிம் மற்றும் தமிழ் பாடசாலைகள் இம்மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா  மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...

காஸா உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்:வெள்ளை மாளிகை தகவல்!

டிரம்ப் - நெதன்யாகு மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது. காஸாவில் அமைதியை நிலைநாட்ட...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வவ்போது மழை!

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

காசாவிற்கு உதவிகளை ஏற்றிச் செல்லும் குளோபல் சுமுத் புளோட்டிலாவை கண்காணிக்கும் துருக்கி ட்ரோன்கள்

இஸ்ரேலின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், காசாவிற்கு உதவிகளை ஏற்றிச் செல்லும் குளோபல் சுமுத்...