இன்று முதல் தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம்!

Date:

தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 9ம் திகதி வரை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தட்டம்மை, ருபெல்லா தடுப்பூசி வாரத்தை முன்னிட்டு துரித பதிலளிப்பு வழங்கல் பிரிவொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 0704 565 656 என்ற இலக்கத்தின் ஊடாக தட்டம்மை, ருபெல்லா உள்ளிட்ட தொற்றுநோய்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...