இன்று முதல் நடைமுறையாகும் புதிய சட்டம்: வர்த்தமானி வெளியீடு

Date:

அரச கடன் முகாமைத்துவ சட்டம் இன்று (25) முதல் நடைமுறைக்கு வருகிறது.

குறித்த சட்டத்தை நடைமுறைபடுத்தும் வகையில் நேற்றையதினம் (24) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்  கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டடுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி, அரச கடன் முகாமைத்துவ சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலத்தில் அரசாங்கம் சார்பில் கடன் பெறுதல், கடன் வழங்குதல் மற்றும் பொதுக்கடன் வழங்குதல், கடன் முகாமைத்துவ அலுவலகம் அமைத்தல் ஆகிய பணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

 

 

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...