இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட வேண்டும்: துருக்கி ஜனாதிபதி அழைப்பு!

Date:

காஸாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக இடம்பெற்று வரும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக இஸ்லாமிய உலகம் ஒன்றுபட வேண்டும் என்று துருக்கிய ஜனாதிபதி ரெசப் தையிப் அர்தூகான் எர்டோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்தான்புலில் திங்கட்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு நிலைக் குழுவின் (COMCEC) 40வது கூட்டத்தில் உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி ரெசப் தாயிப் எர்டோகன், பலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் துயரமான மனிதாபிமானப் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.

மேலும்  “இது இக்காலத்தின் மிகவும் பயங்கரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகும், இஸ்ரேலிய படையெடுப்பு மற்றும் பீரங்கி தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தும் விதமாக, முஸ்லிம் நாடுகள் தங்களிடையே இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டியது இன்றியமையாதது என அவர் வலியுறுத்தினார்.

பலஸ்தீன மக்களின் துன்புறுத்தலுக்கும் லெபனானிய மக்களின் உரிமைக்காகவும் முஸ்லிம் உலகம் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இஸ்ரேலின் படையெடுப்புக்கும் பலஸ்தீன மக்களின் மீதான அநியாயத்திற்கும் எதிராக பலஸ்தீன மற்றும் லெபனான் மக்களை ஆதரிப்பது இஸ்லாமிய உலகத்திற்கு மிக முக்கியம் என எர்டோகன் தெரிவித்தார்.

துருக்கியின் மனிதாபிமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, எகிப்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் காசா பகுதியில் 85,000 டன் பொருளாதார உதவிகளை அனுப்பியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...