கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

Date:

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதை டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து துரிதப்படுத்த முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்காலத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமான வெற்று கடவுச்சீட்டுகள் கிடைக்கவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் சுமார் 2000 பேர் கடவுச்சீட்டினை பெற வரிசையில் காத்திருக்கின்றனர். அத்துடன் 1000 பேர் கடவுச்சீட்டிற்கான திகதி வழங்கப்படும் டோக்கனுக்காக நிற்கின்றனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் கும்பல் முன்வரிசைக்குள் நுழைவதற்கு 5000 ரூபா அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் மோசடி கும்பல்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை பிடிப்பதற்கு குழுவொன்று 5000 ரூபாவை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது

 

 

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...