”கலாதினீ” விருது பெற்றார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சனூன்..!

Date:

ஊடகத்துறையில் 43 வருடங்களாக சேவையாற்றி வரும் புத்தளத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.யூ எம்.சனூஸ் ‘கலாதினீ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

புத்தளம் மாவட்ட செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாவட்ட சாகித்திய கலை விழா இம்முறை ஆனமடுவயின் மறைந்த கலைஞர் எழுத்தாளர் ஏ . சுந்தஹாமி ஞாபகார்த்தமாக தம்பண்ணி அக்வெஸ்ஸ என்ற மகுட வாசகத்தின் அடிப்படையில் ஆனமடுவ சுதம்பாய மண்டபத்தில் கடந்த இன்று வெள்ளிக்கிழமை (29) புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம் எஸ் பீ ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.

இச் சாகித்திய விழாவில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழியில் நீண்ட நாட்களாக சேவையாற்றி வரும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம் யூ எம் சனூன், ஜே. ஏ.ஆர்.சீ பெர்னார்ந்துபுள்ளே, பத்மா குமாரி, ரெக்ஸ் ஹெரிஸன் பெர்னாந்து ஆகியோருடன் கலைத்துறையில் சாதனையாளர்கள் ஆகியோர் ‘கலாதினீ’விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...