சதொச ஊழியர்கள் தொடர்பான வழக்கு: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

Date:

(சதொச) கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தீர்ப்பானது இன்று (1) கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக தவறியதற்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அக்டோபர் 24ஆம் திகதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கினங்க குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்கு மூலம் ஒன்றை வழங்க சென்றுள்ளமையினால் அன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக முடியில்லை என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இதனைக் கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு 25,000 ரொக்கப் பிணையிலும் 1 மில்லியன் சரீரப்பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் மூன்று இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தொரு (365,951)...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...