சதொச ஊழியர்கள் தொடர்பான வழக்கு: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

Date:

(சதொச) கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தீர்ப்பானது இன்று (1) கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக தவறியதற்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அக்டோபர் 24ஆம் திகதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கினங்க குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்கு மூலம் ஒன்றை வழங்க சென்றுள்ளமையினால் அன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக முடியில்லை என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

இதனைக் கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு 25,000 ரொக்கப் பிணையிலும் 1 மில்லியன் சரீரப்பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் அமைச்சர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...