தபால்மூல வாக்கை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்

Date:

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த நாட்களில் தபால்மூல வாக்கை பதிவு செய்ய முடியாதவர்கள் இன்றும் (07) நாளையும் (08) தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனால், இந்த 02 நாட்களில், அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

ஏழு இலட்சத்து முப்பத்து எட்டாயிரத்து ஐம்பது (738,050) தபால்மூல வாக்காளர்கள் இவ்வருட நாடாளுமன்ற தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கடந்த 30ஆம் திகதி முதல் கடந்த 4ஆம் திகதி மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், காவல்துறை ஆகியவற்றில் தபால் மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்தனர்.

இம்மாதம் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்பட்டது.

தபால் மூலம் வாக்களிக்கும் போது அடையாளத்தை சரிபார்க்க ஐந்து செல்லுபடியாகும் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...