தபால் நிலையங்களில் தேங்கியுள்ள மூன்றரை இலட்சம் வாக்காளர் அட்டைகள்!

Date:

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் மூன்று இலட்சத்து 40 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் இன்று (14) வரை தபால் நிலையங்களில் தேங்கிக் கிடந்துள்ளன.

வாக்காளர்கள் உரிய முகவரிகளில் இருந்து வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்தமை, வீடுகளில் இல்லாமை, வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை போன்ற காரணங்களினால் குறித்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவ்வாறான நிலையில் உரிய வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்கள் இன்றைய தினம் தங்கள் பிரதேச தபால் அலுவலகங்களுக்கு வந்து வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் இன்று மாலை வரை குறித்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...