துருக்கி நாட்டின் 101வது ஆண்டு குடியரசு தின நிகழ்வுகள்

Date:

துருக்கி நாட்டின் 101வது ஆண்டு  குடியரசு தினம் , இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) தலைமையில் கடந்த 29ஆம் திகதி  காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் கலந்துகொண்டார்.

இலங்கைக்கான துருக்கி தூதுவரின் அழைப்பின் பேரில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியார் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது ​​துருக்கி தூதுவர் நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படும் தனித்துவமான நட்புகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பிணைப்பை விளக்கினார்.

மேலும், சுமுகமான கலந்துரையாடல்களுக்கு மத்தியில் ஜெனரல் சவேந்திர சில்வா, துருக்கிய மக்களுக்கான இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பற்றி தூதுவர் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதேவேளை துருக்கிய குடியரசு தினத்தின் நினைவாக ஒக்டோபர் 24ஆம் திகதி காலி முகத்திடல் ஹோட்டலில் ‘துருக்கி சுவைகள்’ என்ற கருப்பொருளில் துருக்கிய உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...