தேர்தல் தினத்தன்று ஞானசார தேரருக்கான இறுதி தீர்ப்பு வழங்கப்படுமா?

Date:

இஸ்­லாத்தை அவ­ம­தித்­த குற்றச்சாட்டின் கீழ் பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்­தி­வைக்­கப்­படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறித்த தீர்ப்பு நாளை நவம்பர் 14ஆம் திகதி வழங்­கு­வ­தாக‌ கொழும்பு மேல­திக நீதவான் பசன் அம­ர­சேன கடந்த செப்­டம்பர் 26 ஆம் திகதி அறி­வித்திருந்தார்.

எனினும் நாளை 14 ஆம் திகதி தேர்தல் தினம் என்­பதால், நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஏற்­க­னவே நாளைய தினம் 14 ஆம் திக­திக்­கு­ரிய வழக்­கு­களை பிறி­தொரு தினத்­துக்கு மாற்றி உயர் மற்றும் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றங்கள் அறி­வித்தல் அனுப்­பி­யுள்ள நிலையில் மேல் மற்றும் நீதிவான் நீதி­மன்­றங்­க­ளிலும் பெரும்­பாலும் அதே நடை­முறை பின்­பற்­றப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. எனினும் அது குறித்த உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு வெளி­வ­ர­வில்லை.

எனவே பெரும்­பாலும் 14 ஆம் திகதி பதில் கட­மை­களை முன்­னெ­டுக்க பதில் நீதிவான் ஒரு­வரே கட­மை­களில் இருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளதால், ஞான­சார தேர­ருக்கு எதி­ரான வழக்கின் தீர்ப்பு இன்­னு­மொரு தினத்­துக்கு ஒத்தி வைக்­கப்­ப­டலாம் என தெரி­கின்­றது.

‘இஸ்லாம் ஒரு புற்றுநோய்’ என ஞான­சாரதேரர் வெளி­யிட்ட கருத்­துக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் ரிகாஸ் முன்­வைத்த முறைப்­பாட்­டுக்கு அமைய கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் மேல­திக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்­னி­லையில் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கில் சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு, முறைப்­பாட்­டாளர் தரப்பின் சாட்­சி­யாளர் உள்­ளிட்ட சாட்­சி­யா­ளர்கள் நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில், குறித்த வழக்கை சுமு­க­மாக முடித்­துக்­கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதி­மன்றில் பகி­ரங்க மன்­னிப்பு கோர தயா­ராக இருப்­ப­தாக ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.

source:vidivelli

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...