தேர்தல் விதிமீறல் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஹரின் பெர்னாண்டோ!

Date:

அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஹரின் பெர்னாண்டோ பதுளை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 11 ஆம் திகதி பதுளையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்  தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் அமைதி காலத்தில் பதுளை நகரில் அவர் பேரணி சென்று மேலங்கியை கழற்றி எரிந்து பொலிஸாருக்கு சவால் விடுத்த சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சர்வதேச கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸியின் 10 எண் கொண்ட ஜெர்சியை ஒத்த டி-சர்ட்களை அணிந்திருந்த ஹரின் பெர்னாண்டோவின் ஆதரவாளர்களின் அரசியல் பிரச்சாரத்தை நிறுத்த முயன்றதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

தேர்தல் ஆணைய அதிகாரிகள்  பொலிஸார் தலையிட்டு  மறைமுகமான தேர்தல் பிரச்சாரமாக கருதிய டி-சர்ட்களை அகற்றுமாறு ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...