தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

Date:

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு பெறுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும், தேர்தல் பிரசார அலுவலகங்கள் நாளை 12ஆம் திகதியுடன் அகற்றப்பட வேண்டுமென, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளுக்காக அலுவலகங்களை செயற்படுத்தி வந்தனர்.

அந்த அலுவலகங்களில் தேர்தல் தொகுதி மட்டத்தில் முன்னெடுத்துச் சென்ற அனைத்து அலுவலகங்களும் 12ஆம் திகதி நள்ளிரவுடன் அகற்றப்பட வேண்டுமெனவும் அன்றையதினம் நள்ளிரவுக்கு பின்னர் அந்த அலுவலகங்களை நடத்திச் செல்ல முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் கட்சிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் குழுக்களுக்கு ஒரு தேர்தல் தொகுதிக்கு ஒன்று என்று அடிப்படையில் அலுவலகங்களை வைத்திருக்க முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.

அதேபோன்று வேட்பாளரின் வீடு தேர்தல் பிரசார அலுவலகமாக செயற்பட்டு வந்திருந்தால் அதனைத் தொடர்ந்து அதே விதத்தில் முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் எவ்வாறெனினும் அந்த அலுவலகங்களிலும் பிரசார நடவடிக்கைகளோ அல்லது போஸ்டர், விளம்பர ரீதியான பிரசாரங்களோ முன்னெடுத்துச் செல்ல முடியாதெனவும், அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...