தொழில்நுட்ப பயன்பாடு: நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக ஆரோக்கியம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வித்தியா குமாரிபேல் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த 2023 ஆண்டில் 694 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதமானோர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எயிட்ஸ் நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கையில், எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் கையடக்கத் தொலைபேசி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் உருவாகும் புதிய உறவு முறைகள் அதிகம் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...