நாடாளுமன்ற தேர்தலையொட்டி விசேட போக்குவரத்து சேவை!

Date:

நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து சேவையானது இன்று (12) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நாளையும் (13)  இலங்கை போக்குவரத்து சபை விசேட பேருந்து சேவையை முன்னெடுக்கும் என அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு தினசரி தொடருந்து பயணங்களுக்கு கூடுதலாக, கூடுதல் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் துணைப் பொது மேலாளர் என்.ஜே. இடிபொல அறிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தேர்தல் சேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதால் நாளை (13) வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...