நாடாளுமன்ற தேர்தல் 2024: தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

Date:

பொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலுக்கு மறுதினம் பௌர்ணமி தினமாக உள்ள போதிலும், பெரும்பாலான விகாரைகளின் விகாராதிபதிகள் விகாரைகளை வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை .

இந்த ஆண்டு பொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்பட உள்ளன. விகாரையில் விசேட வழிபாடுகள் நடைபெறுவதால் சில இடையூறுகள் ஏற்படக்கூடும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ள போதிலும், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக விகாரைகளில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு சமூகமாக இடம்பெற்றுவருகின்றது. தபால் மூல வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்த போதிலும் ஏதேனும் காரணிகள் நிமித்தம் வாக்களிக்க தவறியவர்கள்  எதிர்வரும் 7 மற்றும் 8 ஆகிய தினதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

7ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிடின், அருகிலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும்” இவ்வாறு ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...