பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

Date:

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக இரண்டு தினங்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் புதன் (13) மற்றும் வியாழன் (14) ஆகிய இரண்டு தினங்களுக்கும் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (18) மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் அந்தந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர்களிடம் நாளை (12) கையளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல் பணிகளுக்கு அவசியமான, மேசை, கதிரை, மண்டபம் போன்றவற்றை வழங்கச் சகல வலய கல்வி பணிப்பாளர்களும், அதிபர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...