பாவித்த ‘மீன் டின்’ காலணியாக..! : காசா சிறுவர்களின் நிலை!

Date:

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியில் இருந்து ஒரு வருட காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் -காசா போர் உக்கிரமாக இடம்பெற்று வருகின்றது.

காசா சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் இதுவரை 41,000 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சிறுவர்கள்,பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்களும் அடங்குவர்.

சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்து படுகாயமடைந்துள்ளார்கள். காசாவில் வாழும் மக்கள் அனுபவிக்கக்கூடிய துன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

அந்தவகையில் பலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள 10 வயது சிறுமி அன்றாட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்கிறாள். பலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த சிறுமி, பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு, புதிய காலணிகளை வாங்க முடியாத சூழ்நிலையில் தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

‘மீன் டின்’ மூலம் காலணிகளை தயாரித்து,  தனக்கு தேவையான காலணியை உருவாக்கியுள்ளார். இந்த சிறுமியின் முயற்சி சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பிரச்சனைகளை எதிர்கொண்டு வழிவழியாக வாழும் காசா மக்களின் தன்னம்பிக்கை, திறமையை இச்சிறுமி அடையாளமாகக் காட்டியுள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதோடு, பலர் இதனை பாராட்டிப் பார்வையிட்டனர். இந்த நிகழ்வு, காசா மக்களின் உறுதி, தன்னம்பிக்கை, மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் விதத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...