Update: ஹரின் பெர்னாண்டோ கைது!

Date:

நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதுளை பொலிஸ் நிலையத்தில் இன்று வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவம்பர் 11 ஆம் திகதி பதுளை நகரில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டிய ஹரின்  பெர்னாண்டோவின் ஆதரவாளர்களால்  பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

ஹரின்  பெர்னாண்டோவும் அவரது ஆதரவாளர்களும் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் சின்னம் கொண்ட டி-சர்ட்களை அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பொலிஸாருடனான காரசாரமான வாக்குவாதத்தின் போது, ஹரின் ​​பெர்னாண்டோ ஒரு அதிகாரியிடம், “நான் வெற்றி பெற்றால், தேர்தலுக்குப் பிறகு உங்களைப் பார்க்கிறேன்” என்ற கருத்தால் சர்ச்சை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...