Update: ஹரின் பெர்னாண்டோ கைது!

Date:

நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதுளை பொலிஸ் நிலையத்தில் இன்று வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவம்பர் 11 ஆம் திகதி பதுளை நகரில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டிய ஹரின்  பெர்னாண்டோவின் ஆதரவாளர்களால்  பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

ஹரின்  பெர்னாண்டோவும் அவரது ஆதரவாளர்களும் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் சின்னம் கொண்ட டி-சர்ட்களை அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பொலிஸாருடனான காரசாரமான வாக்குவாதத்தின் போது, ஹரின் ​​பெர்னாண்டோ ஒரு அதிகாரியிடம், “நான் வெற்றி பெற்றால், தேர்தலுக்குப் பிறகு உங்களைப் பார்க்கிறேன்” என்ற கருத்தால் சர்ச்சை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...