மலேசியாவில் கலாநிதி பட்டம் பெற்ற இலங்கையர்கள்: சிறந்த மாணவராக ஆஸாத் ஸிராஸ்!

Date:

மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 40 வது பட்டமளிப்பு விழாவின் ஒரு பகுதி நேற்று (16) நிறைவுபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவின் போது இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.

கலாநிதி. அரபாத் கரீம் – பேருவளை
கலாநிதி. அஸ்லம் – தெல்தோட்டை
கலாநிதி. ஆஸாத் ஸிராஸ் – புத்தளம்
கலாநிதி. மொஹமட் அப்துல்லாஹ் – புல்மோட்டை
கலாநிதி. இம்தியாஸ் நூர்டீன் – கொழும்பு
கலாநிதி. ஸப்ரீனா – ஏறாவூர்

கலாநிதி. அரபாத் கரீம் பிக்ஹ் மற்றும் உஸுலுல் பிக்ஹ் துறையிலும்
கலாநிதி. அஸ்லம் ரிஸா சமூகவியல் மற்றும் மானிடவியல் துறையிலும்
கலாநிதி. ஆஸாத் ஸிராஸ் உஸுலுத்தீன் மற்றும் மத ஒப்பீட்டாய்வு துறையிலும், கலாநிதி. மொஹமட் அப்துல்லாஹ் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் துறையிலும், கலாநிதி. இம்தியாஸ் நூர்டீன் வியாபார நிருவாகவியல் துறையிலும், கலாநிதி. ஸப்ரீனா கல்வித் துறையிலும் தமது கலாநிதி பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் கலாநிதி ஆஸாத் ஸிராஸ் மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் Faculty of Islamic Revealed Knowledge and Human Sciences இனால் சிறந்த மாணவருக்கான விருது வழங்கி கௌரவிக்கப் பட்டமையும் விஷேட அம்சமாகும்.

தகவல்: மெஹமட் தெளபீக், அரசியல் விஞ்ஞானத் துறை, மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...