முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான ‘வேதாந்தி’ எம்.எச்.சேகு இஸ்ஸதீன் (80) அவர்கள் இன்று காலை அக்கரைப்பற்றில் காலமானார்கள்.
1944 ஆம் ஆண்டு மே 12ஆம் திகதி பிறந்த இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசாங்க அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் தலைவருமான அவர், அந்தக் காலப்பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவர், மேலும் கட்சியின் அரசியலமைப்பை எழுதிய நபராகவும் நம்பப்படுகிறார்.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக்கான முன்னோடிகளில் முன்னணித் தலைவராகவும் விளங்கியுள்ளார்.
அவர் இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி, வெகுஜன ஊடகத் தகவல், கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற பல பிரதி அமைச்சர் மற்றும் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
சேகு இஸ்ஸதீன் அவர்களுக்கு பந்து Azzuhoor Cegu Isadeen, மஞ்சு, சல்பிகா ஹஸனா (பிரதமரின் பிரத்தியக செயலாளர்), என்ற மகள்கள் உள்ளனர்.
இயல்பிலேயே ஆளுமை மிக்க தலைவர் மற்றும் போராட்டங்களின் முன்வரிசை வீரராக திகழ்ந்த அவர், தனது நீண்டகால பணியாற்றலின் மூலம் சமூகத்தின் பல நிலைகளை சீரமைக்க உறுதுணையாக இருந்தார்.