முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக ஏறாவூர் நகரசபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.நளீம் பெயரிடப்பட்டுள்ளார்!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் முஹம்மத் சாலி நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர்  நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கமைய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 2 ஆசனங்களும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும் கிடைப்பெற்றன.
அதன்படி, கிடைக்கப்பெற்ற ஒற்றை தேசியப் பட்டியல் ஆசனத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் தலைமையகமான தாருஸ்சலாமில்  விரிவான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில், கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களும் கலந்துகொண்டதுடன், தேசியப்பட்டியல் ஆசனத்துக்கான பல முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த முன்மொழிவுகளின் பிரகாரம், தேசியப்பட்டியல் ஆசனத்துக்கானஉறுப்பினராக ஏறாவூர் முஹம்மத் சாலி நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...