முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக ஏறாவூர் நகரசபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.நளீம் பெயரிடப்பட்டுள்ளார்!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் முஹம்மத் சாலி நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர்  நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கமைய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 2 ஆசனங்களும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும் கிடைப்பெற்றன.
அதன்படி, கிடைக்கப்பெற்ற ஒற்றை தேசியப் பட்டியல் ஆசனத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் தலைமையகமான தாருஸ்சலாமில்  விரிவான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில், கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களும் கலந்துகொண்டதுடன், தேசியப்பட்டியல் ஆசனத்துக்கான பல முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த முன்மொழிவுகளின் பிரகாரம், தேசியப்பட்டியல் ஆசனத்துக்கானஉறுப்பினராக ஏறாவூர் முஹம்மத் சாலி நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...