முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக ஏறாவூர் நகரசபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.நளீம் பெயரிடப்பட்டுள்ளார்!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் முஹம்மத் சாலி நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர்  நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கமைய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 2 ஆசனங்களும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும் கிடைப்பெற்றன.
அதன்படி, கிடைக்கப்பெற்ற ஒற்றை தேசியப் பட்டியல் ஆசனத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் தலைமையகமான தாருஸ்சலாமில்  விரிவான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில், கடந்த பொதுத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களும் கலந்துகொண்டதுடன், தேசியப்பட்டியல் ஆசனத்துக்கான பல முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த முன்மொழிவுகளின் பிரகாரம், தேசியப்பட்டியல் ஆசனத்துக்கானஉறுப்பினராக ஏறாவூர் முஹம்மத் சாலி நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...