வினாத்தாள்கள் கசிவதை தடுக்க வினாத்தாள் வங்கி

Date:

பரீட்சைகளின் போது வினாத்தாள்கள், உரிய காலத்திற்கு முன்பே வெளியாவதை  தடுக்கும்  வகையில், விடைத்தாள் வங்கியொன்றை ஸ்தாபிப்பதற்கான புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டிற்குள்  இந்த வங்கியை ஸ்தாபிக்க முடியும் என்றும்.  இதன் மூலம் விடைத்தாள்கள் உரிய காலத்துக்கு முன்பே வெளியிடுதலை தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்புதிய வேலைத் திட்டத்தின் கீழ், வினாத்தாள் தயாரிப்பு நடவடிக்கைகள் நபர்களின் கைகளுக்கு செல்லாமல், கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டு பரீட்சை விடைத்தாள்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பரீட்சைகள் நடைபெறுவதற்கு முன்பே, பரீட்சை வினாத்தாள்கள் வெளிவரும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.

நபர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கை காரணமாகவே இத்தகைய தவறுகள் இடம் பெறுகின்றன. எனினும் எந்த வகையிலும் அது பரீட்சை முறையில் காணப்படும் சிக்கல்கள் அல்ல என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் போது, பரீட்சை வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரே வெளியாகும் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேவையான தொழில்நுட்பம் தற்போது கைவசம் உள்ளது. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வினாத்தாள் வங்கி ஒன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...