503 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை செலுத்தியுள்ள இலங்கை

Date:

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை 503 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில், 275.1 மில்லியன் டொலர்கள் முதன்மைக் கடன் திருப்பிச் செலுத்துதலாகவும், 227.9 மில்லியன் டொலர்கள் வட்டித் தொகையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, 2024 ஜூன் மாத இறுதிக்குள், அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் அளவு 37.5 பில்லியன் டொலர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடைக்காலக் கொள்கைக்கு இணங்க, பாதிக்கப்பட்ட இருதரப்பு மற்றும் வணிகக் கடனாளிகளின் வெளிநாட்டுக் கடன் சேவை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை செலுத்தப்படாத கடன் தவணைகளின் தொகை 5,670 மில்லியன் டொலர்களாகவும், வட்டித் தொகை 2,527 மில்லியன் டொலர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...