NFGG தலைவர் அப்துர் ரஹ்மான், உலமா சபை புத்தளம் நகரக் கிளையினர் சந்திப்பு; இஷாம் மரிக்காருக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்குவது குறித்தும் பிரஸ்தாபம்.

Date:

நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தொகுதியில் பல்வேறு கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்ற சூழ்நிலையில் NFGG என்ற அமைப்பின் சார்பில் புத்தளம் தொகுதியில் போட்டியிடுகின்ற இஷாம் மரிக்காருக்கு NFGG இன் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை வழங்குவது தொடர்பான ஒரு உறுதிமொழியை அதன் தலைவர் அப்துர் ரஹ்மான் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் வேட்பாளரான இஷாம் மரிக்காரின் சகோதரர் இல்ஹாம் மரிக்கார் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி புத்தளத்துக்கு வருகைத் தந்த தலைவர் அப்துர் ரஹ்மான் புத்தளம் நகரக் கிளையின் தலைவர் உட்பட செயற்குழு உறுப்பினர்களை சந்தித்த பின் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இதன் பிரகாரம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் NFGG சார்பில் தேசியப்பட்டியல் அங்கத்துவத்தை இஷாம் மரிக்காருக்கு வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புத்தளம் தேர்தல் தொகுதி முஸ்லிகளை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு தேர்தல் தொகுதியாக இருப்பதோடு நடக்கவிருக்கும் தேர்தலில் ஆளுங்கட்சி தேசிய மக்கள் சக்தி சார்பிலும் அதேபோன்று சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பிலும் சுயேட்சைக் குழுக்கள் சார்பிலும் பல்வேறு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு புத்தளம் தொகுதிக்கான ஒரு முஸ்லிம் வேட்பாளரை தெரிவு செய்கின்ற பிரயத்தனத்தில் மும்முரமாக வேட்பாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

இச்சூழ்நிலையிலேயே புத்தளத்துக்கு வருகைத்தந்த அப்துர் ரஹ்மான் இஷாம் மரிக்கார் குறித்த ஒரு தகவலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...