இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 58 இலங்கையர்கள் கைது!

Date:

இணையத்தில் பணம் மோசடி செய்த 58 இலங்கையர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு கிருலப்பனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் இன்று (09) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக  இலங்கையின் பல பகுதிகளில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த மோசடியில் இந்தியா, சீனா, உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்  இலங்கையில் தங்கியிருந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...