உலக கேரம் போட்டியில் வரலாறு படைத்த காசிமா: ம.ஜ.க தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

Date:

அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் சாம்பியன் கோப்பைக்கான போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை வென்ற சென்னையைச் சேர்ந்த காசிமா (17) தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து தான் பெற்ற வெற்றிக் கோப்பையை காட்டி வாழ்த்துப் பெற்றார்.

அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த காசிமா மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று மாபெரும் சாதனை படைத்து இருக்கிறார்.

மகளிர் தனிநபர், மகளிர் இரட்டையர் மற்றும் மகளிர் குழு பிரிவு என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார் சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வீராங்கனை காசிமா.

அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் காசிமாவுக்கு வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

அமெரிக்காவில் கேரம் உலக சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இது ஆறாவது உலக சாம்பியன்ஷிப் ஆகும். இதில் காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகிய தமிழக வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இவர்களில் 17 வயதே ஆன காசிமா மூன்று பிரிவுகளில் பங்கேற்றார். மகளிர் தனிநபர், மகளிர் இரட்டையர் மற்றும் மகளிர் குழு பிரிவு என தான் பங்கேற்ற மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்.

 

 

 

 

 

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...