காசாவில் உடனடியாக இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
ஆயினும், இத்தீர்மானத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
இஸ்ரேல் பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து விடுவிக்கும் முயற்சிக்கும் இந்தப் போருக்கும் தொடர்பு இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
15 நிரந்தர மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இத்தீா்மானத்துக்கு ஆதரவாக 14-1 என்ற கணக்கில் வாக்குகள் பதிவாகின. ஆனால், அமெரிக்காவின் வீட்டோ காரணமாக தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
காஸாவில் உடனடியான, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தரமான போா் நிறுத்தத்தை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று தீா்மானம் கோரியது. மேலும், அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் போா் நிறுத்தத் திட்டம் குறித்த தனது முதல் தீா்மானத்தை பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஜூன் மாதம் ஏற்றுக்கொண்டது.