இந்திக்க தொட்டவத்தவிற்கு எதிரான ஜம்இய்யதுல் உலமாவின் வழக்கு, ஜனவரி 28 இல்..!

Date:

நபிகளாரை அவமானப்படுத்தும் விதத்தில் கடந்த வருடம் யூடியூப் பதிவொன்றை வெளியிட்ட இந்திக்க தொட்டவத்தவுக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான இந்திக்க தொட்டவத்தவின் சார்பில் அவரது வழக்கறிஞர் இந்த வழக்கை சமரசமாக முடித்துக் கொள்வதற்கு வேண்டிக் கொண்டபோது இந்த விவகாரத்திற்காக அவர் மன்னிப்பு கேட்டு சமரசப்படுத்திக் கொள்ளலாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் சொல்லப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் யூடியூபில் பதிவிட்டுருந்தமையும் அதனைக் கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அப்போதே அறிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...