இந்திக்க தொட்டவத்தவிற்கு எதிரான ஜம்இய்யதுல் உலமாவின் வழக்கு, ஜனவரி 28 இல்..!

Date:

நபிகளாரை அவமானப்படுத்தும் விதத்தில் கடந்த வருடம் யூடியூப் பதிவொன்றை வெளியிட்ட இந்திக்க தொட்டவத்தவுக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான இந்திக்க தொட்டவத்தவின் சார்பில் அவரது வழக்கறிஞர் இந்த வழக்கை சமரசமாக முடித்துக் கொள்வதற்கு வேண்டிக் கொண்டபோது இந்த விவகாரத்திற்காக அவர் மன்னிப்பு கேட்டு சமரசப்படுத்திக் கொள்ளலாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் சொல்லப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் யூடியூபில் பதிவிட்டுருந்தமையும் அதனைக் கண்டித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அப்போதே அறிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...