இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 69ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

Date:

இலங்கை பத்திரிகையாளர் சங்கம் (SLPA)  தனது 69வது ஆண்டு விழா மாநாட்டில் இலங்கை பத்திரிகை துறையில் கெளரவமான பங்களிப்பை வழங்கிய பத்து சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

டி.எப். காரியகரவன ஞாபகார்த்த ஊடக விருதுகளின் கீழ் தயா லங்காபுர, வி.தனபாலசிங்கம், ஜே.ஷீலா விக்கிரமரத்ன, பி.பி.இளங்கசிங்க, உபாலி அறம்பேவல, என்.எம்.அமீன், ஸ்டான்லி சமரசிங்க, எஸ்.செல்வசேகரன், எஸ். பாலசூரிய ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் டி.எப். காரியகரவன ஞாபகார்த்த ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று ஸ்ரீலங்கா பௌண்டேஷன் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றன.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...