இஸ்ரேலுடனான மோதல்: லெபனானிலிருந்து இலங்கை தொழிலாளர்கள் வெளியேற்றம்..

Date:

இஸ்ரேலுடனான மோதல் காரணமாக, 55 பாதிக்கப்படக்கூடிய இலங்கைத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது.

சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) இணைந்து இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை தூதரகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 26 இலங்கையர்கள் கொண்ட அண்மைய குழு நேற்று மாலை (04) கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

லெபனானில் உள்ள IOM இன் உதவியைப் பாராட்டிய இலங்கைத் தூதரகம், லெபனானில் பதற்றமான சூழ்நிலையில் இருந்தாலும், மிகவும் தேவைப்படும் இலங்கையர்களுக்கு தொடர்ந்து வசதிகளை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதாக நம்பிக்கை தெரிவித்தது.

 

 

 

 

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...