காசா சிறுவர்களின் கதறல்கள் காதுகளில் ஒலிக்கவில்லையா?

Date:

காசா பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் அப்பாவிகளின் உயிரிழப்புக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இஸ்ரேலின் தாக்குதலால் தனது தந்தையை இழந்த சிறுவர்கள் அதிர்ச்சியில் கதறும் வீடியோ உணர்வுகளை உறைய வைக்கின்றன.

இப் போரின் விளைவாக ஏற்பட்டுள்ள அழும் குரல்களும், சோகத்துடன் கூடிய நிகழ்வுகளும் மனிதாபிமானம் மீதான கேள்விகளை மீண்டும் எழுப்புகின்றன.

தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் ஈவிரக்கமற்ற முறையிலும் இடம்பெறும் இப் போரின் போது பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அவர்களின் வாழ்வை இழந்து வருவது குறித்த அக்கறை குன்றியதாக இருப்பது உலக மட்டத்தில் மனிதாபிமானம் செத்து விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.

உலகின் அனைத்து சமுதாயங்களும் இந்த சோகத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மனிதாபிமானத்தை நேசிக்கும் அனைவரினதும் ஒரே கோரிக்கையாகும்.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...