ஜனாதிபதி அனுரவின் கீழ் இலங்கையராக இருப்பதில் பெருமைக்கொள்கிறேன். : விசேட வைத்தியர் மக்காரிம்

Date:

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நாட்டை வந்தடைந்தார்.

இந்நிலையில் தனிப்பட்ட விமானத்தில் இல்லாமல் சாதாரண வணிக வகுப்பில் பயணித்த ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் ஏனைய பயணிகளுடன் சகஜமாக கலந்துரையாடினர்.

விமானத்தில் ஏனைய பயணிகளுடன் சரளமாக கதைப்பதையும் உரையாடுவதையும் வெளிநாட்டு பயணிகளிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அதே விமானத்தில் பயணம் செய்த லண்டனில் வசித்து வரும் மாவனல்லையை பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர் மக்காரிம் அவர்கள் இது தொடர்பாக தனது பேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.

ஜனாதிபதி அவர்கள் அவ்வளவு எளிமையான மனிதர், அவர், வணிக வகுப்பில் பயணித்த பயணிகளிடம் வந்து தனித்தனியாக பேசினார், சில தனிப்பட்ட கேள்விகளையும் கேளுங்கள் என்றார்.

ஜனாதிபதி அவர்களின் எளிமை எங்களுக்கு பெரும் உற்சாகம். அவர் ஒவ்வொரு பயணியிடமும் பேசியது மட்டுமல்லாமல், அவர்களின் கருத்துகளையும் கவனமாக கேட்கும் வகையில் நடந்து கொண்டார். இது மிகச் சிறப்பானதொரு அனுபவம்,” எனக் குறிப்பிட்டார்.

மேலும் அங்கு அவரை வரவேற்க எந்த அதிகாரபூர்வ ஏற்பாடுகளும் அறிவிப்பும் இல்லை, சக பயணிகளுக்கு இடையூறு இல்லை, விமானத்தில் இருந்த பிற நாட்டவர்கள் இந்தக் காட்சியைக் கண்டு வியந்தனர்.

அவரது தலைமையில் ‘இலங்கை’ என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்’ எனவும் ஏனைய தலைவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...