ஜெரோம் பெர்னாண்டோவை நம்பி ஏமாறாதீர்கள்: கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அறிவிப்பு!

Date:

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் அல்ல என்றும் எனவே, இவரை நம்பி திருச்சபை உறுப்பினர்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை  விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“ஜெரோம் பெர்னாண்டோ ஆயராக நியமிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பல பத்திரிகை விளம்பரங்களில் செய்திகள் வெளியாகின. அவர் கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் அல்ல என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.

கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரபூர்வமான அப்போஸ்தலிக்க வாரிசு இல்லாத ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க பிஷப் அல்ல.

எனவே இதுபோன்ற தகவல்களால் ஏமாற வேண்டாம் என எங்கள் கத்தோலிக்க விசுவாசிகளை கேட்டுக் கொள்கிறோம்” என்று ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் தந்தை அந்தனி ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...