தேசிய அருங்கலைகள் பேரவைக்கு புதிய தலைவராக கலாநிதி அயேஷா விக்கிரமசிங்க நியமனம்!

Date:

தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவராக நாகரீக வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணரான கலாநிதி அயேஷா விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

கலாநிதி விக்கிரமசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக 2006 ஆம் ஆண்டு முதல் நகரீக ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

இலங்கை, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து பிராண்ட் விளம்பரம் மற்றும் வடிவமைப்பில் விரிவான தொழில்முறை அனுபவத்தை கொண்டுள்ளார்.

காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான கலாநிதி விக்கிரமசிங்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றில் முதல் தரத்தில் பட்டம் பெற்றார்.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அருங்கலைகள் பேரவையின் உள்ளூர் கைவினைத் துறையை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

 

 

 

Popular

More like this
Related

சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன்...

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை!

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில்...

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்...

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...