நீதி அமைச்சரின் கலாநிதிப் பட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றம் விளக்கம்

Date:

நாடாளுமன்ற இணையத்தளத்தில் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று குறிப்பிடப்பட்டது தொடர்பில்  இலங்கை நாடாளுமன்றம் விளக்கமளித்துள்ளது.

குறித்த தகவல்களை உள்ளீடு செய்யும் போது ஏற்பட்ட தவறினால் ஏற்பட்டதாக இலங்கை நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்றம் இதனை தெரிவித்துள்ளது.

அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வழங்கிய தகவல் பத்திரத்தில் கலாநிதி என்ற பட்டம் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதன் படி, மேற்படி தவறினை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்றம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்காரவுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு இலங்கை நாடாளுமன்றம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தது.

மேலும், மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிழைகள் ஏற்படாமல் இருக்க, நாடாளுமன்றம் தற்போது அனைத்து எம்.பி.க்களின் தகவல்களை இணையதளத்தில் மீண்டும் சரிபார்த்து புதுப்பித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...