பண்டிகைக் கால உணவுப் பாதுகாப்பு: நாடளாவிய ரீதியில் விசேட சோதனை

Date:

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகமாக கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களின் தரத்தைப் பாதுகாக்க, ஒரு சிறப்பு வேலைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுத்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்ததாவது:

1750 பொது சுகாதார பரிசோதகர்கள் கொண்ட குழு, இந்த சோதனைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்திற்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும். நாடளாவிய ரீதியில் 150க்கும் மேற்பட்ட சோதனைகள் டிசம்பர் 1 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்

இந்த நடவடிக்கைகள், பொதுமக்களின் ஆரோக்கியத்தையும், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்றன.

 

 

 

 

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...